கண்ணில் நிற்கும் துளிகள்

கண்ணில் நிற்கும் துளிகள்
–ஹரன்பிரசன்னா

இரட்டைக் கோட்டுக்குள் சிறைபடாமல்
நான்கு கோடுகளுக்குள் அடங்காமல்
பிதுங்கி வழியும் எழுத்துகளை
சலிப்போடு
இரப்பர் கொண்டழிக்கும்
சிறுகையைப் பற்றி முத்தமிட
வெறிக்கும் சிறுமிக்கு
வாய்திறக்காமல் ஒரு வார்த்தை-
ஒன்றிலிருந்து நூறுவரை
சும்மா எண்ண,
வேண்டியிருக்கிறது ஒரு தனிப்பொழுது.

Share

Comments Closed