பெயர் சூட்டிக்கொள்ளும் பறவை – கவிதை

வானத்தில் சுழன்றடிக்கிறது

பெயர் தெரியாத பறவையொன்று

மற்றவையோடு

அதிக வித்தியாசங்களில்லை

அமர்ந்திருத்தலில்

தலைசாய்த்தலில்

இமைத்தலில்

ஓயாமல் இறக்கைகள் அடித்தலில்

வானம் அளத்தலில்

பெண்துணைத்தேடலில்

புதுச்சட்டைச் சகிதம்

தேர் காணப் போகும்போது

“சொத்”தெனப் பொதுப்பதிவு செய்து

பெயர் சூட்டிக்கொள்கிறது

“எச்சமிட்ட பறவை”.

Share

Comments Closed