இரண்டாம் கவனம் – கவிதை

கவனம் ஈர்க்கிறது

முன்னெப்போதோ ஒரு கணத்தில்

மலர்ந்துவிட்ட பூ,

நிறமிழந்து

மணமிழந்து

தேனீக்களின் கவனமிழந்து

காம்பறுத்து

சிதறிய சருகுகளாய்

மென்காற்றிலாடி

கீழே விழும்போதும்.

Share

Comments Closed