பரணிக் கவிதை – 2

செவி வழி நிலம்

இது ஐ ஆர் எட்டுடே

அது ஐ ஆர் இருபதுடே

நல்ல சம்சாரிக்கு

புல்ல பாத்தாலே வித்தியாசம் தெரியுமுல்லா

அங் ங் ங் ங்க ஓடுதுல்லா…

அது பொது ஓட

ஓடைக்கடுத்தாப்ல உங்கப்பன் வயலு

கொழுந்துனா மலையடில

கோவணத்தக் கட்டிட்டு

கல்லுப்பொறுக்கி வெளயாண்டோம்

பஞ்சம் தாங்காம போயிட்டான்

மறுமாசமே வித்துட்டேல்லா?

பாத்துவாடே.. நெருஞ்சி கெடக்கும்

இன்னைக்கு நம்ம வரப்பு பச்சயா நிக்கி

ஆளப் பாத்துச் சிரிக்கி

காத்துள்ளபோதே தூத்துக்கோன்னான்

இப்பமே பாத்துக்கடே

பரணிக் கவிதை – 1

Share

Comments Closed