இரவின் படம் – கவிதை

அன்று தீடீரென்று மழை பெய்துவிட்டிருந்தது.
தலைமாட்டில் அமர்ந்துகொண்டு விஜிதா விடாமல்
தக்காண பீடபூமி பற்றி படித்துக்கொண்டிருந்தாள்
மழை போலவே திடீரென விரிந்த என் எண்ணச் சிக்குகளின்
-அது கனவாகவே இருக்கவேண்டும்.
ஒவ்வொரு பிம்பத்திலும் ஒவ்வொரு தாமரைப்பூ இருந்தது
தலைமாட்டில் திடீரென
(a+b)3-ன் சத்தம்
பாதி திறந்த கண்களின் வழியே உள் நுழைகிறது
படபடத்துக்கொண்டிருக்கும் இடாகினிப் பேய்களும்.
எப்படியோ உறங்கியிருக்கிறேன்/விழித்திருக்கிறேன்.
நானிருந்த சூழலுக்கு மிக அந்நியமாய் அறை விளக்கு
மீண்டும் கண்மூட
என் புலன்களின் வழியே மலர்கிறது
முதல் தாமரைப்பூ

Share

Comments Closed