நீராம்பல் – கவிதை

பதிவு வகை: கவிதை

நீராம்பல்

கிளி தன் எஜமானனுக்காகக் கத்தியது
ஒரு நெல்லை அவன் தட்டவும்
ஒரு சீட்டை எடுத்தது
அவன் கட்டை விரலைத் தேய்க்கவும்
கூண்டுக்குள்ளே சென்றது
மரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்
பூனையைப் பற்றி அதற்குத் தெரியவில்லை
எல்லாரும் அதை வியந்தார்கள்,
அதுவும் கிளிக்குப் புரியவில்லை
அடுத்த நெல்லுக்காகக் கிளி காத்துக்கொண்டிருந்தது
கிளியின் கூண்டுக்கு வெளியே
எல்லையற்ற வானம்
கிளியறியாமல் கரைந்துகொண்டிருந்தது

Share

Comments Closed