வழி – கவிதை

வழி என்னும் கவிதை சொல்வனத்தில் பிரசுரமாகியுள்ளது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://solvanam.com/?p=10807

வழி

மீண்டும் கடக்கவியலாத
ஆற்றின் பாதையில் செல்கிறேன்
கணம்தோறும் நடந்துவிடும்
செயல்களைத் திருத்திக்கொள்ளும்
வாய்ப்பு மறுக்கப்படும்
வழியென்றறிந்து
கவனமாக அடி வைக்கிறேன்
கண்கூசும் ஒளியில்
நடைபிறளும் நேரமும்
வரலாறென்றாகிவிடும்
சோகத்தைக் கொண்டு
நீண்டு செல்கிறது அச்சாலை.

Share

Comments Closed