Facebook Notes – 1

நாள்: 12-ஜூன்-2011

Choose the best answer – கருணாநிதிக்கு உதவுவோம்

கருணாநிதியின் இந்த பேட்டியைப் (http://dailythanthi.com/article.asp?NewsID=652219&disdate=6%2F11%2F2011&advt=1) படித்தால், கலங்காத மனமும் கலங்கிவிடும். திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகாருக்கு அடுத்த உருகார் இதுதான். பல கேள்விகளுக்கு அதிரடி பதில்தான். என்ன பொண்ண கையைப் பிடிச்சி இழுத்தியா (http://www.youtube.com/watch?v=rgANpyU48cw) ரக பதில்கள்தான்.

எப்படி இந்த பத்திரிகையாளர்களும் விடாமல் கேள்வியைக் கேட்கிறார்கள் என்பதுவும் பாவமாகவே இருக்கிறது.

திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை மறைத்துப் பேசாமல் திரித்துப் பேசாமல் என்று என்னவெல்லாமோ சொல்கிறார். எனது மகள் கனிமொழி என்று சொல்லிவிட்டு, இரண்டு நிமிடங்கள் கண் கலங்கி, உடன்பிறப்புகள் தலைவா கோஷமிட அவர் அன்று மத்திய அரசுதான் காரணம் என்ற வகையில்தான் பேசியதை டிவியில் நானே பார்த்தேன். ஆனால் அவரது பேட்டியோ சத்தியமாகக் கேளுங்கள் என்று வருகிறது. கடவுள் சத்தியமா கேளுங்கள் என்று இன்னொருமுறை நாக்கு தவறாததற்கு அவர் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

எல்லாக் கேள்விகளுக்கும் அவர் நிருபர்களையே பதில் சொல்லச் சொல்கிறார். தமிழ் ரத்தம் ஓடுகிறதா என்கிறார். டெல்லியில் நிருபர்கள் கேள்வி கேட்டால் ஹிந்தி ரத்தம் ஓடுகிறதா என்று கேட்காமல் இந்திய ரத்தம் ஓடுகிறதா என்றாவது கேட்கவேண்டும்.

கருணாநிதிக்கு நிருபர்கள் கொஞ்சம் கருணை காட்டி, சூஸ் தி பெஸ்ட் ஆன்சர் அடிப்படையில் கேள்விகளைக் கொடுத்துவிட்டால், அவரும் டிக் போட்டுக் கொடுத்துவிடுவார். மறக்காமல் ‘இவற்றில் எதுவும் இல்லை’ ஆப்ஷனை வைத்துவிடுங்கள்.

Link: http://www.facebook.com/note.php?note_id=207186185991642

————–

நாள்: 10-ஜூன்-2011

பகடியா உண்மையா ரொம்பக் கண்ண கட்டுது!

சாரு எழுதுவதில் எதை சீரியஸாக எடுத்துக்கொள்வது எதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது என்பதே குழப்பமாக உள்ளது.

சாரு வாசகர் வட்டம் பற்றி அவர் எழுதியபோது, சிலர் பஸ்ஸில் அதனை நகைச்சுவைப் பதிவு என்றார்கள். ஆனால், நான் படித்தபோது அது பகடியான பதிவாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, எப்படி இவர்கள் அதனை பகடி என்று கண்டுபிடிக்கிறார்கள் என. சாரு இணையக் குழுமம் அல்லது ஃபேஸ்புக்கில் தொடரியாக இருந்தால்மட்டுமே இதெல்லாம் புரியும் என்றார்கள். ஆனால் தொடர்ந்து சாரு வாசகர் வட்டம் பற்றிய பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் அது தொடர் பகடியா அல்லது உண்மையா என்பது குழப்பமாகவே உள்ளது. பகடிதான் என்றால், அக்கவுண்ட் நம்பரெல்லாம் கொடுத்து உண்மை போலவே பகடி செய்ய தில் வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன்!

இப்போது உயிர்மையில் சாருவின் புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி, மோதிரம் பரிசு என்று தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் சாரு. (இப்படி சாரு தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் என்று சொல்வது கூட கொஞ்சம் ரிஸ்க்காக உள்ளது! திடீரென்று அந்தப் பதிவு தூக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துவிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது!) இது மனுஷ்யபுத்திரனுக்கும் சாருவுக்கும் இடையேயான பகடியா அல்லது உண்மையா என்பது இன்னொரு குழப்பமாக உள்ளது. உண்மை என்றால், வாழ்த்துகள். பகடி என்றாலும் வாழ்த்துகள்தான்! கண்டனமா செய்யமுடியும்? :>

Link: http://www.facebook.com/note.php?note_id=206725746037686

————–

நாள்: 5-ஜூன்-2011

ராம்தேவ் கைது அராஜகம்

ராம்தேவின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், இந்த காங்கிரஸ் அரசு செய்திருப்பது அராஜகம்.

ஊழலுக்கெதிராக உண்ணாவிரதம் இருப்பதை ஏன் லத்தி சார்ஜாலும் கண்ணீர்ப் புகையாலும் கலைக்கவேண்டும்? வினேச காலே விபரீத புத்தி.

உடனடியாக ராம்தேவின் ஊழல்களை – அப்படி ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் – உடனே வெளியிட்டு அவரை கேரக்டர் அஸாஸிநேஷன் செய்யும் அரசு.

1300 கோடி சொத்து என்கிறார்கள். அவ்வளவு வரும் வரை என்ன செய்துகொண்டிருந்தன அரசுகள்?

அதிகமான சொத்து உள்ள சாமியார்களை எல்லாம் என்ன செய்யப் போகிறது இவ்வரசு? சாய்பாபா உடலுக்கு முன் சோனியாவும் மன்மோகனும் தேவுடு காத்தது ஏன்?

காங்கிரஸ் ஒரு கேவலமான ஆட்சியை நடத்துகிறது, மன்மோகன் மிக மோசமான பிரதமர். இதில் இவர்களுக்கு பாபா ராம்தேவைச் சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

ராம்தேவின் பின்னால் இதுவரை ஆர் எஸ் எஸ் இருந்ததோ இல்லையோ, இனி இருக்கவேண்டும் – ராம்தேவ் தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியாக இல்லாதிருந்தால்.

Link: http://www.facebook.com/note.php?note_id=207186185991642

Share

Comments Closed