அபிலாஷின் உளறல்கள்

உயிரோசையில் வெளியான அபிலாஷின் கட்டுரை இங்கே: 

அபிலாஷின் கிறுக்குத்தனமான கட்டுரை. சரோஜாதேவியில் வரக்கூட லாயக்கற்ற கட்டுரை இது. அங்கங்கே ஆய்வு போன்ற முலாம் பூசி உளறிக்கொட்டும் இந்தக் கட்டுரை சொல்வது என்ன?

* இஸ்லாமியர்களின் அதிக நேரம் உடலுறவு கொள்வார்கள்.

* ராமசேனையினர் வாலை உறவுக்குப் பயன்படுத்தலாம்!

* இஸ்லாமியர்களின் குழந்தைகளே அப்பாவைப் போன்ற சாடையில் உள்ளன.

* உடலுறவின்போது நிகழும் குறியின் இயக்கம், கள்ள உறவின் விந்துவை வெளியேற்றுவதே.

இத்தனை உளறல்களையும் உளறிவிட்டுக் கடைசியில் நம சிவாய என்று முடித்திருக்கிறார்.

முன் தோல் நீக்கத்தைத்தான் சொன்னேன், இஸ்லாமியர்களையா சொன்னேன் என்று மேலும் உளறமாட்டார் என்றே நம்புகிறேன்.

இந்த கேடுகெட்ட்ட கட்டுரையை அபிலாஷ் எழுதினார் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஏனென்றால் அபிலாஷின் கட்டுரை உளறல்களுக்கு ஓர் அளவில்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

இன்னொரு விஷயம், ஜெயமோகன் இவரது படைப்புகளை ஊனத்தை வைத்து எடைபோட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் கட்டுரையிலும் தன்னை நொண்டி என்று கூறியிருக்கிறார். தேவையே இல்லாத சுய பச்சாதாபம் இங்கே ஏன் வந்தது? இந்த பச்சாதாபத்தை அவரது படைப்புகளைக்கொண்டு மிகச்சரியாக ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் ஊடுருவினால் ஓட ஓட வசைபாடுவது. இதுதான் அபிலாஷ்.

Share

Comments Closed