பாரதியார் கவிதைகள் (விளக்க உரையுடன்)

பாரதியார் கவிதைகள் உரையுடன் வெளிவந்திருக்கிறது. பாரதியார் கவிதைகளுக்கெல்லாம் உரையா என்று ஒரு காலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நிச்சயம் உரை வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இப்போது முதன்முறையாக ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. கவிஞர் பத்மதேவன் உரை எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் கண்ட அட்டகாசமான புத்தகம் இது. தவறாமல் வாங்கிவிடுங்கள். நிச்சயம் நம் வீட்டில் இருக்கவேண்டிய பொக்கிஷம் இந்தப் புத்தகம். உரை தெளிவாக புரியும்படியாக அழகான தமிழில் உள்ளது. பாரதியின் தீவிர அன்பர்கள் இப்புத்தகத்தைப் படித்தால் சில வரலாற்றுத் தரவுகளைச் சொல்லக்கூடும். அவையும் சேர்க்கப்படுவது நல்லது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாணவன் கையிலும் இந்தப் புத்தகம் இருப்பது அவசியம். நம் ஒவ்வொரு கையிலும் இந்தப் புத்தகம் இருப்பது தேவை. 

புத்தகத்தின் அச்சு, அட்டை நேர்த்தி எல்லாம் கூடி மிக அழகாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது இப்புத்தகம். 

விலை ரூ 750 (1096 பக்கங்கள்)

இப்புத்தகத்தின் விற்பனையைப் பொருத்தே மறுபதிப்பெல்லாம் வரும் என நினைக்கிறேன். கிடைக்கும்போதே வாங்கிப் பத்திரப்பத்தி வைத்துக்கொள்ளுங்கள். 

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-364-7.html

போன் மூலம் வாங்க: Dial for books 94459 01234

Share

Comments Closed