Joker

* படம் குப்பை என்பது நிம்மதியான விஷயம்.
 
* இடைவேளைக்குப் பிறகு வரும் ப்ளாஷ்பேக்கின் உச்சம் கொஞ்சம் உலுக்குவதாக இருந்தாலும், கதையின் பலமின்மை காரணமாகவும், அக்காட்சியின் நீளம் காரணமாகவும் எடுபடவில்லை. தேங்க் காட்.
 
* ஹீரோ மிக நன்றாக நடித்திருக்கிறார். சில இடங்களில் ஓவர் ஆக்ட். மொத்தத்தில் விழலுக்கு இறைத்த நீர்.
 
* ஹீரோவுடனே வரும் நடிகையும், ஜெயகாந்தனைப் போல் ஒப்பனை கொண்ட நடிகரின் நடிப்பும் அட்டகாசம்.
 
* ஜனாதிபதி என்று சொல்லி ஹீரோ செய்யும் லூசுத்தனங்களை சகிக்கமுடியவில்லை. சில இடங்களில் ட்ராஃபிக் ராமசாமியின் நினைவு. 🙂
 
* பல இடங்களில் ஈவெரா படம் வருகிறது. பகத்சிங் பெயர், காந்தி பெயர் அடிபடுகிறது.
 
* ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் நேரடியாக குறை சொல்லும் ஒரே ஒரு வசனம் உண்டு.
 
* ரஜினியை லேசாக பகடி செய்யும் ஒரு காட்சி உண்டு.
 
* வெமுலா அல்லது கண்ணையா குமார் போஸ்டர் காட்டப்படுகிறது.
 
* வெளிப்படையாகவே கம்யூனிஸ ஆதரவு. அதிலும் க்ளைமாக்ஸில் ஓவர்.
 
* கிறித்துவ மதப்பிரசாரத்தைக் கிண்டல் செய்யும் காட்சியில் கவனமாக மாரியம்மாவைக் குறிப்பிடும்போது தந்திரமாக அல்லாவை மறந்துவிடுகிறார் இயக்குநர். ரொம்ப தெளிவு.
 
* பல காட்சிகள் மறைமுகமாக மோதியை பரிகசிக்கின்றன.
 
* சீமான் கடுமையாகக் கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார் ஒரு காட்சியில்.
 
* பலர் கிண்டல் செய்யப்பட்டாலும் ஒரு ஊழல்வாதியின் ஜாதி மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அது வழக்கம்போல இளிச்சவாய பிராமண ஜாதி.
 
* ஐயோ பாவம் பவா. தாமிராவின் டெலிஃப்லிமில்கூட இதைவிட நல்ல பாத்திரம்.
 
* க்ளிஷேவான மொக்கை போலி அறச்சீற்ற வசனங்கள்.
 
* சுதந்திர தினத்தை தோழர்கள் குறி வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆண்டவன் கணக்கு வேறு. படம் நாளை வரைகூட ஓடாது போல. :))
 
* ஜோக்கர் திரைப்படம் சொல்லும் ஒரு செய்தி முக்கியமானது. அதாவது இந்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடவேண்டுமென்றால் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவது. ஒரு மெண்ட்டல் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்திவிட்டு கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவரைக் கொல்ல கிளம்புகிறது. இது வெறும் மெண்டல் சம்பந்தப்பட்டதல்ல. இதுவே கம்யூனிசம். இதுவே கம்யூனிஸ்ட்டுகள் உள்ளூர விரும்புவது. இந்தியா தன் உள்ளார்ந்த பலத்தினாலும் அசைக்கமுடியாத ஜனநாயகத்தாலும் இதை வென்றபடியே உள்ளது. கம்யூனிஸ்ட்டுகளின் ஒரே குறி இதை உடைப்பது. இந்தியாவை சிதைப்பது. இதை ஜோக்கர் வெவ்வேறு காரணங்களை முன்வைத்துச் சொல்கிறது. ஆனால் இந்தியாவின் ஜனநாயகம் மீண்டும் மீண்டும் இந்த இஸத்தை, பஞ்சம் படுகொலை பேரழிவைக் கொண்டு வரும் கம்யூனிஸத்தைத் தோறகடித்தபடியே இருக்கும். இருக்கட்டும். இருக்கவேண்டும்.
 
அனைவருக்கும் சுந்ததிர தின வாழ்த்துகள்.
 
பின்குறிப்பு: இது நடுநிலையான விமர்சனமல்ல. 🙂
 
#ஜோக்கர்
Share

Comments Closed