ரஜினியின் தூத்துக்குடி பயணம்

ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது. ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது.
ரஜினி தூத்துக்குடிக்குப் போகிறார் என்ற செய்தி வந்ததும், அங்கே அவருக்கு எவ்விதமான வரவேற்பு இருக்குமோ என்று ஒரு கணம் யோசிக்கவே செய்தேன். ஆனால் ஃபேஸ்புக் வேறு, நிஜ உலகம் வேறு என்பதை மீண்டும் உணர்த்தியது இன்றைய ரஜினியின் தூத்துக்குடி பயணம். அங்கே முற்போக்காளர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை என்பதாலும், அங்கே ரஜினியை வருங்கால முதல்வர் என்றெல்லாம் அவர்கள் புகழ்ந்ததைப் பார்த்ததாலும், அடுத்த நான்கைந்து நாளைக்கு இன்னும் தீவிரமாக ரஜினியைத் திட்டித் தீர்ப்பார்கள் என்பது உறுதி.
மோதியைப் பிரதமராக்கியது போல ரஜினியையும் இவர்களே முதல்வராக்குவார்கள். யார் சென்றால் கூட்டம் வருகிறது, அது எந்த மாதிரியான கூட்டம், அது சொல்லும் செய்தி என்ன என்று புரிந்துகொள்பவர்களுக்கு ரஜினிக்கு இன்று கிடைத்த வரவேற்பின் உள்ளர்த்தம் புரியும். புரியாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள விரும்பாதவர்கள் அல்லது புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்கள், நயந்தாரா வந்தாலும் இதே கூட்டம் வரும் என்று சொல்லிவிட்டு தப்பிப்பார்கள். தப்பிக்கட்டும்.

Share

Comments Closed