கவிதை

சிறுமியின் சைக்கிள்

சுவரின் ஓரத்தில்
காற்றில்லாமல்
சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்
தன் சின்ன சைக்கிளுக்கு
வாய் வைத்து
காற்றடித்துப் பார்க்கிறாள்
சிறுமி.
மெல்ல சிணுங்கும் சைக்கிளை
ஒரு தட்டு தட்டுகிறாள்.
சைக்கிள் அமைதியாகிறது.
வீட்டைத் தாண்டிக் கடந்து போகும்
குப்பை வண்டிக்காரன்
சிறுமியைப் பார்த்துச் சிரிக்க,
பயத்துடன் சைக்கிளைக்
கட்டிக் கொள்கிறாள் அவள்.

Share

Comments Closed