Thudakkam

துடக்கம் (M) – பெயரைப் பார்த்த உடனேயே புரிந்து கொண்டிருக்க வேண்டும். பாதிப் படம் பார்க்கும் வரை அது மோகன்லாலின் மகள் திரைப்படம் என எனக்கு உறைக்கவில்லை. மோகன்லாலின் திரைப்படம் என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஹீரோ இத்தனை தாமதமாக வருவது இந்தப் படமாகத்தான் இருக்கும் என்று நானாகவே மனதிற்குள் நினைத்துக் கொண்டு, இதோ மோகன்லால் வந்து விடுவார், இதோ கீரிக்கும் பாம்புக்கும் சண்டை வந்துவிடும் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.

Spoiler ahead.

படத்தில் கதாநாயகி காணாமல் போய் பத்திரமாக வீட்டுக்கு வந்து விட, என்ன எழவுடா இது திரைக்கதை என்று எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தால், யூ அவேக் என்று யாரோ ஹை டெசிபிலில் காதில் கத்த, எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் அதிர்ச்சியில் கண் முழித்துப் பார்த்தால், ஹாஃப் ஒயிட்டில் மோகன்லால் ஏதோ எந்திரி என்று சொல்லிக் கொண்டிருந்தார். அடடா மோகன்லால் வந்துவிட்டார் என்று பார்த்தால் அடுத்த 20 நிமிடத்தில் படம் முடிந்து விட்டது‌ என்ன கொடுமை பண்ணி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். விஸ்மயா மோகன்லாலின் முதல் திரைப்படம் என்பதற்காக துடக்கம் என்று வைத்திருக்கிறார்கள் போல‌ அதற்காக இப்படித் தற்காப்புக் கலையெல்லாம் சொல்லித் தருவேன் என்பதெல்லாம் ஒரு கதையா? அதுவும் மோகனாலும் விஸ்மயாவும்! விளங்குமா? ஜெய ஜெய ஹோவில் மனைவியைக் கணவன் மிதிக்கவும், அதை இந்தியாவே கொண்டாடவும், அப்படிக் கொண்டாடுவார்கள் என நினைத்து விட்டார்கள். மிடில.

தூக்கம் வரவில்லை என்றால் பலமாகச் சிபாரிசு செய்கிறேன். பாதிக்குப் பிறகு தூக்கம் உறுதி.

Share

Unmadham

உன்மதம் (M) – இன்னும் எத்தனை போலீஸ் திரைப்படங்களை மலையாளிகள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எத்தனையோ படங்கள் வந்துவிட்ட போதும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒன்றைச் செய்து விடுகிறார்கள். இந்த படத்தில் ஹாரரையும் இன்வெஸ்டிகேட்டிங் த்ரில்லரையும் சரியான விதத்தில் இணைத்திருப்பது அட்டகாசமாக வந்திருக்கிறது. முதல் ஒன்றரை மணி நேரம் படம் அமர்க்களமாகவே இருக்கிறது. பின்னர் கொஞ்சம் தொய்வாகி,கடைசியில் பத்து நிமிடத்தில் போதும்டா சாமி என்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். இத்தனை பெரிய வீழ்ச்சியைத் தவிர்த்திருக்க வேண்டும். அதே சமயம் பார்க்கவே முடியாத அளவுக்கு படுதிராபையாகவும் போகவில்லை என்பது ஒரு சிறிய ஆறுதல்.

Share

Anbe Diana

அன்பே டயானா – சுமாரான திரைப்படம். லோ கிளாஸ் காமெடித் திரைப்படம் போல வளவளவென்று பேசியே கழுத்தறுத்து விட்டார்கள். குறிப்பாக, பரிதாபங்கள் கோபி படத்தைத் தனியாளாகக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார். ஹீரோ பாரி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகி மிக அழகு. பெரிய அளவில் ஜெயிப்பார். ரோஜா சேத்தன் அருமை. கடைசியில் கொஞ்ச நேரம் ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. சில காட்சிகள் சிரிக்க வைத்தன. நேரம் போகாமல் தவிப்பவர்கள் மூளையைக் கழட்டி விட்டுப் பார்க்கலாம். பார்க்காவிட்டால் நஷ்டம் ஒன்றும் இல்லை. ஜமா எடுத்த இயக்குநரின் அடுத்த படம் இத்தனை தட்டையாகச் சம்பந்தமே இல்லாமல் பைத்தியக்காரத்தனமாக இருந்திருக்கத் தேவையில்லை. ஒரே ஆறுதல் படம் முழுக்க வரும் அழகான தெலுங்கு. பலமுறை நான் யோசித்திருக்கிறேன், ஏன் தமிழ்த் திரைப்படங்களில் இங்கேயே தமிழர்களாக வாழும் தெலுங்கு, கன்னட, மலையாள மக்களின் மொழி வருவதில்லை என. அந்தக் குறையை இந்தப் படம் முதன்முறையாக ஓரளவு போக்கியிருக்கிறது.

Share

ASI Babita Singh Reporting

Babita Singh Reporting (H) – நிமிஷா அப்படியே கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். ஆச்சரியம். ஒரு கட்டத்தில் நமக்கே அவர் நடிப்பில் மூச்சுமுட்டத் தொடங்குகிறது.

படத்தின் மிகப்பெரிய குறை, மிக மெதுவாகப் போகிறது. மற்ற எல்லாமே ப்ளஸ்தான். படம் எடுத்த விதம், கேமரா கோணங்கள், முக்கியமாக லொக்கேஷன் என அனைத்தையும் பார்த்து பார்த்து தூள் பரத்தியிருக்கிறார்கள். தரமோ தரம்.

ஆனால் கடைசி ஐந்து நிமடங்கள் நம்மைப் பைத்தியக்காரனாக்கிவிட்டார்கள். ஒரு தற்கொலையை கொலையாக நிரூபிப்பது நம்பும்படி இருக்கலாம். ஆனால் அதையே மாற்றிச் சொன்னால், இந்தக் கொடுமைக்காகவா இரண்டு மணி நேரம் பார்த்துத் தொலைத்தோம் என்று வெறுப்பு வந்துவிடுகிறது.

இன்னொரு‌ ப்ளஸ் சொல்ல வேண்டும்‌ என்றால், போலிஸ் வேலைக்குச் செல்லும் பெண் எதிர்கொள்ளும் குடும்பப் பொறுப்புகள் தொடர்பான ஸ்ட்ரெஸ் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கேமரா எடிட்டிங் மற்றும் பின்னணி இசை இவற்றிற்காகப் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதும் ஒளிப்பதிவுக்கான விருதும் இந்தத் திரைப்படத்துக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Share

Uyir – Malayalam Movie

உயிர் (M) – படமாகச் சுமாரான திரைப்படம் தான் என்றாலும், கடைசியில் திரையில் காட்டப்பட்ட ஒரு விவரம், அதாவது இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று பார்த்தபோது, அந்த விவரங்களைத் தேடி எடுத்தேன். சாட்ஜிபிடி பல விவரங்களைக் கொடுத்து உதவியது. அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் படம் நிஜமாகவே உண்மைக்கு இயன்ற அளவு நெருக்கமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதை நிச்சயம் பார்க்கலாம்.

Spoiler ahead.

குழந்தைகள் மீதான வன்முறை என்ற அடிப்படையில் பார்த்தால், பெரிய வன்முறை எதையும் நேரடியாகக் காட்டாவிட்டாலும், அவர்கள் அடையும் உளவியல் ரீதியான வன்முறை, உண்மையிலேயே மனதைப் பிசைகிறது. எனக்கு இந்தச் சிறிய வன்முறையைக் கூடத் தாங்க முடியவில்லை. பெரும் மனப்போராட்டம் நிகழ்ந்துவிட்டது. கடைசியில் அவர்கள் நிம்மதியாக மீட்கப்ப்பட்ட பின்னர்தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தேன். உண்மையை இத்தனை நெருக்கமாக எடுத்ததற்காகவும் கடைசி 20 நிமிடங்களுக்காகவும் பார்க்கலாம்.

ஒரு படமாக மட்டுமே அணுகினால், உண்மைக்கு நெருக்கமாக எடுத்ததாலேயே என்னவோ, எந்த விதத் திருப்பமும் இன்றி, மிக நேரடியாகச் செல்லும், எளிதாக யூகிக்க முடியும் கதை என்கிற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்கவே முடியாது.

சிலர் இந்தப் படத்தில் தேவையின்றி ஒரு இஸ்லாமியப் பாடல் நுழைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அது தவறு. இந்தப் படத்தின் உண்மைக் கதைக்கான போலீஸும் ஓர் இஸ்லாமியராகவே இருந்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் மனப் போராட்டத்தோடு அந்தக் குழந்தைகளைத் தேடிப் போகும் போது, அவர் நம்பிக்கையுடன் கூடிய ஒரு பாடலைப் போட்டிருப்பது நியாயமாகத்தான் தெரிகிறது.

From ChatGpt

சமீபத்தில் வெளியான மலையாளப் படம் ‘Uyir’ ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 2017-ல் கண்ணூர் மாவட்டம் Iritty பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கையும், அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி S. Anshad-ன் அனுபவங்களையும் மையமாகக் கொண்டது.

இந்தக் கதை தொடங்கியது 2015-லேயே.

கர்நாடகாவின் Tumakuru பகுதியைச் சேர்ந்த Raju என்பவர், தனது மனைவி Shobha மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த T.K. Manjunath ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 2015 டிசம்பர் 21 அன்று Raju-வை அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொன்று, உடலை காட்டுப் பகுதியில் எரித்ததாக Manjunath பின்னர் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு Shobha மற்றும் Manjunath கண்ணூர் மாவட்டம் Iritty-க்கு வந்து வாழ்ந்தனர். Shobha-வுக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருந்தனர். Aryan-க்கு 6 வயது, Amrutha-வுக்கு 4 வயது.

2017 ஜனவரி 21 அன்று Iritty பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் அழுகிய உடல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் அது Shobha என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் மரணம் குறித்து சந்தேகம் இருந்தாலும், பின்னர் அது கொலை என்பது உறுதி செய்யப்பட்டது.

போலீசாரின் சந்தேகம் Shobha-வுடன் வாழ்ந்து வந்த Manjunath மீது திரும்பியது. அவரை விசாரித்தபோது, Shobha-வின் மரணத்திற்கும், ஏற்கெனவே நடந்த Raju கொலைக்கும் தொடர்புடைய அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.

Shobha-வுடன் ஏற்பட்ட தகராறில் Manjunath அவரது கழுத்தை நெரித்ததாகவும், அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து கிணற்றில் போட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சில போலீஸ் தகவல்களின்படி, Shobha கிணற்றில் போடப்பட்டபோது உயிருடன் இருந்திருக்கலாம் என்றும், பின்னர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

Shobha இறந்த பிறகு, அவரது இரண்டு சிறு குழந்தைகளான Aryan மற்றும் Amrutha-வை Manjunath Bengaluru-க்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து Mumbai செல்லும் ரயிலில் அந்த இரண்டு குழந்தைகளையும் தனியாக விட்டுவிட்டார்!

அம்மா இறந்துவிட்டார். அப்பா ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுவிட்டார். அவர்களுடன் இருந்த Manjunath-ம் அவர்களை ரயிலில் தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.

சுமார் 45 நாட்களுக்குப் பிறகு அந்த இரண்டு குழந்தைகளும் Mumbai-ல் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை பாதுகாப்பில் எடுத்த அதிகாரிகள், Kerala Police-க்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது Iritty Police குழு Mumbai சென்று அந்தக் குழந்தைகளை மீட்டு Kerala-க்கு அழைத்து வந்தது. இந்த விசாரணை மற்றும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் அப்போது Iritty Police-ல் இருந்த S. Anshad முக்கிய பங்கு வகித்தார்.

இந்த உண்மைச் சம்பவத்துடன்தான் Uyir திரைப்படத்தின் தொடர்பு இருக்கிறது.

ஒரு முக்கியமான விஷயம் மட்டும்: Manjunath-க்கு இறுதியில் நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கியது, அந்த இரண்டு குழந்தைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து நம்பகமான பொது பதிவுகள் கிடைக்கவில்லை.

Share

Chinna Chinna Aasai Malayalam

சின்ன சின்ன ஆசை (M) – எப்படி இப்படி ஒரு செயற்கைத்தனமான கண்றாவியை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் முழுக்க காசி வருகிறது என்பதற்காகப் பார்த்தேன். காசியே பிடிக்காமல் போய்விடும் போலிருக்கிறது. ஒரு காட்சி கூட உருப்படியாகவோ ஒட்டுதலாகவோ இல்லை. ஏன் இந்தக் கருத்தைப் பார்த்தோம் என்று நான் நொந்து கொண்டே படம் முழுக்கவும் பார்த்து முடித்தேன். இரண்டு கிழடுக்களுக்கும் நடிக்க வரவில்லை. படம்தான் அழுது கொண்டே இழுத்துக் கொண்டே போகிறது என்றால், அந்த இசையமைப்பாளர் அதைவிட இழுவையான பாடல்களைப் போட்டுச் சாவடித்து விட்டார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ஒரு டயலாக், என் மாமியாருக்கு என்னைப் பிடிக்காது என்று… அதன் ஃப்ரெஷ்நெஸ்ஸைக் கேட்டு ஆஹா என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்… அது ஹிட் காக்ரோச் விளம்பரம். இந்த கொடுமையில் தான் படம் இருந்தது. இதில், ஏதோ மலையாளியை வைத்தே தமிழ் வசனங்களையும் எழுதி இருப்பார்கள் போல‌. அது ஐயையோ ரகம்.

தயவு செய்து சொல்கிறேன், அந்தப் பக்கமே ஒதுங்கி விடாதீர்கள். சமீபத்தில் பார்த்த மிக செயற்கைத் தனமான திரைப்படம் என்றால் இந்தக் கண்றாவி தான். இந்தப் பாவத்தைப் பார்த்ததற்காகவே மீண்டும் ஒருமுறை காசிக்குச் செல்லத்தான் வேண்டும்.

Share

Baalan Malayalam Movie

Baalan (M) – தரமான படம். ஆஹா ஓஹோ படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் நல்ல படம் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தப் பையன் மற்றும் அம்மாவாக வரும் பெண்ணின் நடிப்பும் கேமராவும் கேரளச் சூழலும் மனதை அள்ளுகின்றன. முதல் பாதி வரை மிகவும் விறுவிறுப்பாகவே செல்லும் திரைப்படம், பின்னர் கொஞ்சம் அலைபாய்ந்தாலும், இறுதிக் காட்சியில் மனம் கணக்க வைத்து விடுகிறார்கள். நிச்சயம் பாருங்கள்.

Share

Palliyezhuchi Paavai Paadalgal

இளையராஜா எழுதி அவர் ஆர்கெஸ்ட்ரேஷனில் சஞ்சய் சுப்ரமணியன் இசையில், பள்ளியெழுச்சிப் பாடல்கள் சில கேட்டேன். இதுவரை இளையராஜா எழுதிய எத்தனையோ பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஏன் இளையராஜா நல்ல மெட்டுக்களுக்கெல்லாம் பாடல் எழுதுகிறார் என்று தோன்றியதுண்டு. ஆனால் அவையெல்லாம் வேறு ஜாதி. பள்ளியெழுச்சிப் பாடல்கள் நிஜமாகவே வேறு ஜாதி. இப்படி அவர் எழுதியிருப்பது சத்தியமாக இறைச் செயலன்றி வேறில்லை. நம்பவே முடியவில்லை. அப்படி ஒரு தமிழ். இசையும் வரிகளும் அருமை. கேட்டும் போது அப்படியே பழம்பெரும் ஒரு சிவன் கோவிலுக்குள் (நெல்லையப்பர் கோவில் போன்ற ஒன்றுக்குள்) நுழைந்த உணர்வு ஏற்படுகிறது.

Share