கிளியைப் பற்றி நான்கு கவிதைகள்

(1)

இதுவென்று இனங்காண முடியாதவாறு

உருமாறிப்போனாலும் சிரித்துக்கொண்டிருக்கிறது

அக்கிளி.

மரத்தாலான அக்கிளியை

தூர நின்று கொஞ்சிக்கொண்டிருக்கிறது

குழந்தையொன்று, கையில்

கிளியின் உடைந்த வால் உயிர்த்துடிப்புடன்.

(2)

அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட

பச்சைக்கிளியொன்று

கழுத்தின் நிறமின்றி, கண் திறப்பின்றி

ஒரு வயிறு உள்ளடங்கி

கிளியின்றி ப்ளாஸ்டிக்குடன்

·பேன் காற்றில்

அங்குமிங்கும் ட

பதுங்கிக் காத்திருக்கிறது பூனையொன்று

(3)

விர்ச்சுவல் கிளிகள் சொல்லச் சொல்லச் சொல்லுவதில்லை.

கணினித் திரையில் இணைப்பைச் சொடுக்கவும்

சிறகுகள் படபடக்கப் பறந்து

காரியம் முடிந்தவுடன் அமைதியாகின்றன;

சில சமயம் ஸ்கிரீன் ஸேவராகவும்.

(4)

வானத்தில் பறக்கிறது ஒரு நிஜக்கிளி.

-oOo-

Share

Comments Closed