தோட்டத்து வெளியில் ஒரு பூ – கவிதை

தோட்டத்து வெளியிலும் சில பூக்கள் என்கிற வண்ணதாசனின்

சிறுகதைத் தலைப்பை எங்கேயோ பார்த்தேன். அந்த வரி தந்த

பாதிப்பில் வந்த கவிதை இது.

தோட்டத்து வெளியில் ஒரு பூ

கண்ணெதிரே பூத்துக்குலுங்கும்

மலர்களையொதுக்கி

பிறவொன்றைத் தேடும் என் பிறவிக்குணம்

பெரும் சம்மட்டியடி வாங்கியிருக்கிறது

வழியெங்கும் என்னுடன் நடந்துவரும்

பருவகாலங்களை விலக்கி வைத்து

எங்கோ அலைந்துகொண்டிருக்கும்

வசந்த காலத்தைத் தேடும் நிமிடங்கள்

கடந்த காலங்களாக

நிகழ்கால வேர்வை நெஞ்சுக்குழிக்குள்

கொஞ்சம் இதமாயும்

ஜீவனற்றுப் போயிருந்ததாக

நானே உருவாக்கிக்கொண்ட நிலத்தில்

என் கவனத்திலிருந்து தப்பியிருக்கிறது

வெய்யில் சூட்டில்

நிறைய பளபளப்பு

தோட்டத்திற்குச் சொந்தமான,

தோட்டத்து வெளியில் ஒரு பூ

Share

Comments Closed