கமற்சிலையரசியல்

கமற்சிலையரசியல்

சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன்நான். ஆனால், அதை உடைப்பது ரொம்ப கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் என கேட்டிருப்பார்” என்றார்.

கமல் – 12-மார்ச்-2018 (விகடன் தளத்தில் இருந்து.)

அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் ஒதுக்க முதலில் சட்டம் செய்தவர் டாக்டர் சுப்பராயன் அவர்களாவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உத்தியோகம் வழங்க சட்டம் செய்தவர் தோழர் எஸ்.முத்தையா முதலியார் என்றே சொல்லலாம். தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி வழங்கினவர் பொப்பிலி அரசர் என்றே சொல்ல வேண்டும். இம் மூவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும், நாளைக்கு இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயிருந்தாலும், இந்தக் காரியங்களுக்கு இவர்களுக்கு சிலை வைத்து கௌμவிக்க வேண்டியது நன்றி உடைமையாகும் என்பதில் நமக்குச் சிறிதும் ஆக்ஷேபணையில்லை.

குடியரசு துணைத் தலையங்கம் 10.11.1935

ஆகவே கொச்சி அரசாங்க உத்தியோகத்தில் சர். ஷண்முகம் வகுப்புவாத பிரதிநிதித்துவ உரிமை ஏற்படுத்திவிட்டார். எனவே அவருக்கு கொச்சி அரசாங்கமும் கொச்சி பிரஜைகளும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் அவருக்கு இந்த இரு கூட்டத்தவரும் இரண்டு சிலைகள் செய்து அரசாங்க சிலையகத் துறைமுகத்திலும், பிரஜைகளது சிலையை பட்டணத்து நடுவிலும் அல்லது சட்டசபைக்கு முன்பக்கமுள்ள மைதானத்திலும் வைத்து நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

குடிஅரசு தலையங்கம் 02.08.1936

அதாவது ஈவெராவின் கருத்து சிலைகளுக்கு எதிரானதாக இல்லை. மாறாக பிராமணர்களுக்குச் சிலை வைப்பதற்கு எதிராகவே இருந்துள்ளது. கமல்ஹாசனாரும் இக்கருத்தையே கொண்டிருக்கிறார் எனில் அதைத் தெளிவுபடுத்துவது நல்லது. அன்னாருக்கு இக்கருத்து இல்லை என்பது தெரியும். ஆனால் ஈவெரா இருந்திருந்தால் சிலையே வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என்றெல்லாம் கருணாநிதித்தம்பித்தனமாக அடித்துவிடாமல் இருந்தால் அன்னாருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் என்பதைச் சொல்லவேண்டியுள்ளது.

இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஈவெரா தனக்குத் திறக்கப்பட்ட சிலைக்கு ஆதரவு தருவது போல் உள்ளது. இதையும் அன்னார் கணக்கில் கொள்ளவேண்டும்.

 

மேலே உள்ள புகைப்படம் – மாயவரத்தான் ஃபேஸ்புக் டைம்லைனில் இருந்து எடுக்கப்பட்டது.

Share

Comments Closed