ததும்பும் குவளை (கவிதை)

ததும்பும் குவளை

கால் நீட்டி பின்சாய்ந்து
சோபாவில் அமர்ந்திருக்கிறேன்
முன்னிருக்கும் டீப்பாயிலுள்ள
குவளையில்
ததும்பிக்கிடக்கிறது நீர்
அலை வரும், மீன் உழலும்
அருகில் அமர்ந்து பார்த்திருக்கிறான் அவன்.
அம்மா தன் பங்குக்கும்
மனைவி ஆசையுடனும்
மகனும் மகளும் 
உறவினர்கள் நண்பர்கள்
தொடர்ந்து குவளையில் நீரூற்ற
நிறைந்தும் நிறையாமல்
ததும்பிக்கொண்டே இருக்கிறது குவளை.
நீங்களா என்று கேட்டேன்.
சூழ நின்றொலிக்கும்
சத்தங்கள் நின்று
சட்டென நிசப்தமாக
நானும்தான் என்றவன்
தன் முறைக்காகக் 
காத்திருப்பதாகவும் சொன்னான்.

Share

Comments Closed