ஏன் திமுக ஒழிக்கப்படவேண்டும் – மாரிதாஸ்

கீழே உள்ளவை மாரிதாஸ் சொல்பவை. நான் சொல்பவையல்ல. நான் அப்பாவி. அனைத்துத் திட்டுகளும் அவருக்கே செல்லட்டும் என்று நியாயமாக ஒதுங்கிக்கொள்கிறேன். மாரிதாஸ் பொரிந்து தள்ளும் வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=-hH4qcsIO4E&feature=youtu.be

திமுக ஏன் அழிக்கப்படவேண்டும் என்பதற்கு மாரிதாஸ் சொல்லும் காரணங்கள்:

  • அரசு ஊழியர்களுக்கு அநியாயத்துக்கு சம்பள உயர்வு தருவதால்.
  • தாசில்தார்கள், வி ஏ ஓ உடன் இணைந்து அரசு மற்றும் கோவில் நிலங்களை அபகரித்ததற்காக.
  • திமுக ஒரு ரௌடி கட்சி. நில அபகரிப்பு செய்பவர்களுக்கு, நில மாஃபியாக்களுக்குப் பிடித்த கட்சி திமுக.
  • சபரிமலை விவகாரத்தில் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்றது திமுக. ஹிந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், ஹிந்துக்களை திமுக அசிங்கப்படுத்துகிறது. டாவின்சி கோட் படத்தைத் தடை செய்யும் திமுக, உண்மையான தீர்ப்பை ஆதரிக்கிறது!
  • ஹிந்து மதத்தின் திருமண மந்திரங்களை அசிங்கமானவை அருவருப்பானவை என்று சொன்னவர் ஸ்டாலின். ஆனால் இதே வார்த்தைகளை இஸ்லாமியர் மற்றும் கிறித்துவ சடங்குகளைக் குறித்து அவரால் சொல்லமுடியுமா?
  • மின் தடை. 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் மின் தடை இருந்தது திமுகவின் ஆட்சிக்காலத்தில்தான்!
  • திமுகவுக்குக் கொள்ளை அடிக்கத் தெரியுமே ஒழிய, நிர்வாகத் திறமை கிடையாது.
  • திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாகிவிட்டது.
  • சமச்சீர்க் கல்வியைப் புகுத்தியது. இதனால் கல்வியே நாசமாகிவிட்டது.
  • அரசுக் கல்லூரிகளில் துணைவேந்தர் துவங்கி அனைத்துப் பணிகளிலும் அரசியலை நுழைத்தது திமுகதான்.
  • கச்சத்தீவு, காவிரி வாரியம், ஈழத் தமிழர் படுகொலை விவகாரங்களில் தமிழர்களுக்குத் தீங்கிழைத்தது திமுக. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எம்பிக்கள் எதுவுமே பேசவில்லை. இதை எதிர்த்துப் பேசியவர்கள் ஃபார்வர்ட் ப்ளாக்கின் மூக்கையா தேவர் மற்றும் யூனியன் முஸ்லிம் லீக்கின் முஹம்மது ஷரீஃப் மட்டுமே. இவர்களது எதிர்ப்பை ஆதரித்த ஒரே தேசியத் தலைவர் வாஜ்பாய். கச்சத்தீவை இழந்ததற்கு காரணம், திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்.
  • பொறுப்பற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது திமுக.
  • திமுக ஒரு கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம். இவர்களது நோக்கம் கூட்டமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதும் அதைப் பிரிப்பதும்தான்.
  • திமுகவைப் போல யாராலும் வசனம் பேசி ஏமாற்றமுடியாது. பொய் பொய் பொய் மட்டுமே இவர்களது கொள்கை. திராவிடம் 2.0 என்பதே பொய்ப் பிரசாரம்.
  • பட்டியல் இனத்தவரின் ஜாதியை ஒழிக்கப் பயன்பட்டது அண்ணல் அம்பேத்கரின் சட்டமே ஒழிய, ஈவெரா அல்ல. திமுக ஜாதியை ஒழித்தோம் என்று சொன்னது பொய். அது பட்டியல் இனத்தவரை ஏமாற்றச் சொல்வதுதான்.
  • கடைசியாக: நான்கு முறை முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கரின் அண்ணன் மளிகைக்கடை வைத்திருக்கிறார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் உறவினர்கள் முதல் கொள்ளுப்பேரன் வரை பல கோடி சொத்து உள்ளது.
  • நேர்மையானவர்களுக்கு வாக்களிப்போம். திமுகவுக்கு வாக்களித்துவிட்டு தமிழ்நாடு சிங்கப்பூராகும் என்று கனவு காண்பதற்கு உரிமையே கிடையாது. டாட்.
Share

Comments Closed