Book fair thoughts

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நகைச்சுவையாக ஃபேஸ்புக்கில் எழுதிய தெறிப்புகளின் தொகுப்பு! #நகைச்சுவை

”சார்.. எனக்கு டிஸ்கவுண்ட்டே வேண்டாம். சொன்னா கேளுங்க..”
“ஐயையோ.. அதெப்படிங்க? புத்தகக் கண்காட்சில 10% டிஸ்கவுண்ட் குடுத்தே ஆவணும்..”
“இல்ல சார். டிஸ்கவுண்ட்டோடதான் நான் புத்தகம் வாங்கணும்னா எனக்கு அப்படி ஒரு புத்தகமே வேணாம்! புத்தகத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார்!”
“டிஸ்கவுண்ட் இல்லாமத்தான் நான் புத்தகம் விக்கணும்னா அப்படி விக்கவே வேணாம். புத்தகக் கண்காட்சிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார்..”
*
நைட்டெல்லாம் இதோட ஒரே ரோதனை. தள்ளிப் படுங்க! நிம்மதியா தூங்க முடியுதா?


சார், பன்னண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு புக் பாத்தேன் சார். யார் எழுதினதுன்னு ஞாபகம் இல்ல. யார் போட்டதுன்னும் மறந்துட்டேன். அட்டை சேப்பு கலர்ல இருக்கும் சார். நாவலா சிறுகதையா கட்டுரையான்னு சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது. அந்தப் புத்தகம் கிடைக்குமா சார்?

நேத்து பத்து புத்தகம் வாங்கினேன். வீட்ல போய் பாத்தா பதினொன்னு இருக்கு சார். இந்தாங்க சார்.
உங்களை போல வாசகர்கள் இருக்கிறதாலதான்..
ரெண்டு பக்கம் படிச்சிப் பாத்தேன். தப்புன்னு தோணிச்சி சார்.

வாசகர்: போன வருஷம் வாங்கின புக்ஸையே படிச்சி முடிக்கல. அதான்..

பதிப்பாளர்: போன வருஷம்‌ போட்ட புக்ஸையே வித்து முடிக்கல. நாங்க புது புக் போடலியா? கூச்சப்படாம வாங்குங்க சார்.

மனசே சரியில்லை சார்.
என் புத்தகத்தைப் படிங்க..
அதுக்கப்புறம்தான் சார்..

‘தூரம் போகும் பறவைகள்’ நாவல் பேரை அடுத்த ப்ரிண்ட்லயாவது ‘தூரமாகப் போகும் பறவைகள்’னு மாத்திருங்க சார், ப்ளீஸ்.

சார்.. புத்தக அட்டை பிரமாதம்.
தேங்க்ஸ் சார்.
அட்டை மட்டும் தனியா கிடைக்குமா சார்? பத்து ரூபா வேணா குடுத்துர்ரேன்..

ஆடியோ புக் என்ற பெயரில் ‘நீராரும் கடலுடுத்த’ பாடல் சிடி விற்பனை செய்தவருக்கு போலீஸார் எச்சரிக்கை.

என்ன சார் தமிழ் இது. ஒரு வரி கூட புரியலை. நானும் கடைசி வரை ஒரு வரி விடாம படிச்சி பாத்துட்டேன். எப்படி சார் இதையெல்லாம் ப்ரிண்ட் பண்றீங்க?”

“படிக்காமதான் சார்”

ட்ரைன்ல ஏறினா அடுத்து இறங்குறதுக்குள்ள படிச்சி முடிக்கணும். அப்படி எதுனா இருக்கா சார் உங்க ஸ்டால்ல?
நாங்க ட்ரைன் டிக்கெட் விக்கிறதில்லைங்க.

சார், உங்க புத்தகமெல்லாம் விலை கூடிக்கிட்டே போகுது..
இதுவே சினிமாக்குன்னா.. ஹோட்டலுக்குன்னா..
அதில்ல சார். விலை எவ்ளோ வேணா வெச்சிக்கோங்க. புத்தகம்‌ பத்து பக்கத்துக்குள்ள இருந்தா நல்லருக்கும்.

வாசகர்: நேத்து வாங்குன உங்க நாவல்ல பத்து பக்கம் ப்ரிண்ட்டே ஆகாம வெள்ளையா இருக்கு சார்.
ஹரன் பிரசன்னா: ஸாரி சார். ப்ரிண்ட்டிங் மிஸ்டேக். மாத்தி குடுத்துடறேன் சார்.
வாசகர்: நோ நோ. அந்தப்‌ பத்துப் பக்கம்தான் க்ளாஸ். அதுவே இருக்கட்டும்.

பின் நவீனத்துவ நாவல் என்று சொல்லி புத்தக விலைப்பட்டியலை விற்க முயன்றவரால் புத்தகக் காட்சியில் பரபரப்பு.

கொரானாவில் இருந்து தப்பிப்பது எப்படி என்ற நூலால் கொரானா பரவுமா என்று கேட்ட அப்பாவியை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வரலாற்றைத் திறந்த மனதுடன் அணுகி அதைத் திருகலின்றிப் பதிவு செய்யவேண்டும்.

– ஒரு கம்யூனிஸ்ட்டின் வெளிப்படையான ரகசியக் குறிப்பிலிருந்து.

சார், நல்ல புக்ஸ் நாலு சஜஸ்ட் பண்ணுங்க சார்.
இப்படி கேட்டீங்கன்னா நான் எழுதின எல்லா புத்தகத்தையுமே உங்களுக்கு சொல்ல வேண்டி வரும்.
அதில்ல சார்.. நல்ல புக்ஸா நாலு சஜஸ்ட் பண்ணுங்க சார்.

எழுத்தாளரின் ஆன்மா: என் எல்லா‌ புத்தகமும் ஸ்டால்ல இருக்கா?
பதிப்ப்பாளரின் ஆன்மா: ப்ரின்ட்ல இருக்கு சார். எப்ப வேணா வரலாம்.

சார், புத்தகத்தை எடுத்தா கீழ வைக்க முடியக் கூடாது. அப்படி ஒரு புக் வேணும்!
அதுக்கு நீங்க பைண்டிங் ஆஃபிஸ்க்குத்தான் போகணும். அங்கதான் பசை ஒட்டி காய வெச்சிருப்பாங்க.

புத்தகத்துக்கு 10% டிஸ்கவுண்ட் ஒரு தடவையா இரண்டு தடவையா என்று கேட்ட நபரை‌ பதிப்பாளர்கள் விரட்டியடித்தனர்.

“பில்லிங் க்ளோஸ் பண்ணிட்டோம் சார்..”
“சார்.. தாம்பரத்துல இருந்து வரேன் சார்! எங்கல்லாம் தேடினேன் சார் இந்த புக்கை! என்னா ட்ராஃபிக்.. அதான் லேட்டாயிடுச்சு சார்.. இந்த ஒரு‌ புக் மட்டும் பில்‌ போட்ருங்க சார்.. ப்ளீஸ் சார்.”
அவர் கையில் இருந்த பொன்னியின் செல்வனைப் பார்த்த பதிப்பாளர் மயக்கமடித்தார். அடுத்த வருடம்தான் மயக்கம் தெளியும்.

புத்தகக் கண்காட்சியில் இரண்டு பதிப்பாளர்கள் சந்தித்துக்கொண்ட போது –
“உங்களுக்கு ஃபர்ஸ்ட் ரோ-லயே கடை. எங்களுக்கு உள்ள மாட்டிக்கிச்சு சார். கூட்டமே இல்லை.”
“உங்களுக்கு சொல்லிக்க ஒரு காரணமாவது இருக்கு சார்!”

அப்பளக்கடைக்காரர் தன் மகனிடம்: தம்பி, கூட்டமா வர்றாங்கள்ல பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும். ஒவ்வொருத்தரையும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ. அவங்க பொறாமைப்பட்டு வாய் வெச்சி வெச்சித்தான் நம்ம சேல்ஸும் குறைய ஆரம்பிச்சிருச்சி. நீ வளர்ந்து பெரியாளாகி ஒரு புத்தகம் எழுதி அதை அவங்களயே விக்க வெச்சி நீ பழி வாங்கணும். இதுதாண்டா என் வாழ்நாள் ஆசை!

“சார்.. போன வருஷம் இந்த புக் உங்க கடைலதான் வாங்கினேன்.. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது..”
“தம்பி இங்க‌ வாங்க. அதோ நிக்கிறார் பாத்தீங்களா.. அவர் நாலு வருஷம் முன்னாடி வாங்குனவரு..”

எழுத்தாளர் அவரது நண்பருக்குச் சொல்லிக்கொண்டிருந்தது-
“சார்.. பன்மைத்துவம் வேணும் சார். எங்களை பாருங்க.. நான் மார்க்ஸிஸ்ட். அவரு சோஷியலிஸ்ட். அவங்க எக்ஸ் நக்ஸல். இவங்க மாலெ. அதோ அவங்க சோஷியலிஸ்டிக் மாவோயிஸ்ட். இவங்க சிபிஎம். அவங்க சிபிஐ. இதுதான் சார் முக்கியம்.”

இரண்டு எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக்கொண்ட போது –
“உங்க புக் அட்டை‌ பிரமாதம் சார்!”
“நானும் சொல்லணும்னு நெனச்சேன். உங்க புக் அட்டையும் அட்டகாசம் சார். டிசைனர் பின்னிட்டான்!”

“எழுத்தாளர் முத்தத்துல இருக்கார்ன்னா ‘எழுத்தாளர் முற்றம்’ அரங்கில் இருக்கிறார்னு அர்த்தம்யா.. யதார்த்தமா இருங்கய்யா..”

இரண்டு வாசக நண்பர்கள் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக் கொண்ட போது –
“கம்யூனிஸம் பத்தி புக் வாங்கிருக்கேன் மச்சி”
“அட.. நானும்தான் மச்சி”
“மூலதனத்தை அடிப்படையா வெச்சி எளிமையான தமிழ்ல…”
“அட நானும்தான் மச்சி!”
“புக் பேரு கம்யூனிச சிந்தனைகள் – மூலதனத்தை அடிப்படையாக வைத்து.”
“ஓ! நான் வாங்குன புக் பேரு கம்யூனிசச் சிந்தனைகள் – மூலதனத்தை அடிப்படையாக வைத்து. ச் இருக்கு. நாம எக்ஸேஞ் பண்ணி படிச்சிக்கலாம்!”

பதிப்பாளர்: லீவ் நாள்ன்னு பேரு. ஆனா சுத்தமா கூட்டமே இல்ல.
வாசகர்: ஆமா சார். எனக்கு டிக்கெட் நேத்தே கிடைச்சி படமும் பாத்துட்டேன்.

எழுத்தாளர்: ரொம்ப டீட்டெய்ல்டா ஆழமா விரிவா எல்லா கோணங்கள்லயும் சிந்திச்சி இதுவரை வராத மாதிரி ஒரு புக் எழுதணும்..
பதிப்பாளர்: நீங்க எதுனா எழுதுங்க சார், போட்ரலாம்.

‘புக் ஃபேர் முழுக்க சுத்தி பாத்துட்டேன்.. பெரியார், கம்யூனிஸம் புக்ஸெல்லாம் அவ்ளோ இல்லியே ப்ரொ?’
‘ப்ரொ… ப்ரொ.. எந்திரிங்க ப்ரொ!’

பித்தகக் கண்காட்சிக்கு போகசொல்லோ ஒரே குருவிங்கோ!

டெரரிஸ்ட் மாரி மூஞ்சி கை எல்லாம் மூடிக்கினு இருக்குமே!

ஆமா.. ஆனா குருவிங்கோ முத்தம் குடுத்துகினு இருந்திச்சுங்கோ.

Share

Comments Closed